தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். 1960களில் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கதை பற்றி இயக்குனர் சுதா கொங்கரா கூறியிருப்பதாவது: இது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் கதைதான். 1960கள் எப்படி இருந்தது என்பதை இந்த தலைமுறைக்கும் காட்டும் படம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் அது. பல மறைக்கப்பட்ட உண்மைகளையும் படம் பேசுகிறது.
சிவகார்த்திகேயனும், அதர்வாவும் அண்ணன் தம்பிகள், மதுரையை சேர்ந்தவர்கள். சிவகார்த்திகேயன் அரசு வேலையில் இருக்கிறார். அதர்வா என்ஜினீயருக்கு படிக்கிறார். இருவரும் பாசத்தோடு இருந்தாலும் இரு வேறு கொள்கைகளை கொண்டவர்கள். அவர்களுக்கு கருத்து மோதல்கள் இருக்கிறது. சிவா அமைச்சர் மகள் ஸ்ரீலீலாவை காதலிப்பார். சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் இந்த 3 பேர் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படம்.
ஏராளமான ஆய்வுகள் செய்து, கடந்த 5 ஆண்டுகளாக இதற்காக பணியாற்றி படம் உருவாகி உள்ளது. ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும், சிவாவுக்கும் ரியலான சண்டை காட்சிகள் இருக்கிறது. ஸ்ரீலீலா டாக்டருக்கான தேர்வு எழுதிக்கொண்டே இந்தப் படத்தில் நடித்தார். என்கிறார் சுதா கொங்கரா.