படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட்டில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த துரந்தர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஸ்பை திரில்லர் படமாக வெளியான இந்த படம் பத்தே நாட்களில் 550 கோடிக்கு மேல் வசூலித்து இந்த வருட இறுதியில் பாலிவுட் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே துரந்தர் போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது பயங்கரமான ஒன்றுதான். அது மட்டுமல்ல இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக மூன்று மாதங்கள் நம்மை காத்திருக்க சொல்கிறார்கள். எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். முன்கூட்டியே இதன் ரிலீஸ் செய்தியை அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் வெளியாகும் என்பது உறுதியாகிறது.




