பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ஒரு தேதியில் படங்களை அறிவிப்பதும் பின்னர் திடீரென தள்ளி வைப்பதும், அதன்பிறகும் அந்தப் படங்கள் கடைசி நேரத்தில் வெளிவராமல் போவதும் கடந்த சில வருடங்களாக மட்டுமல்ல பல வருடங்களாகவே நடந்து வருகிறது. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அப்படியான சிக்கல் வருவது ஒட்டுமொத்த வியாபார அமைப்பையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.
இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய படங்கள் 'வா வாத்தியார், லாக் டவுன்'. இந்த இரண்டு படங்களுமே வெளியீட்டிற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் படங்கள். ஓரிரு முறை வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படங்கள். 'வா வாத்தியார்' படத்திற்கு நீதிமன்ற இடைக்காலத் தடை நீக்கப்பட்டால் மட்டுமே இந்த வாரம் வெளியாகும். இருந்தாலும் தடையை நீக்கும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகத் தகவல்.
இந்தப் படங்கள் தவிர இந்த வார வெளியீடாக, “மகாசேனா, சல்லியர்கள், யாரு போட்ட கோடு” ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.