பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் 'வா வாத்தியார்'. இந்தப் படத்தை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இன்று டிசம்பர் 8 இந்த இடைக்காலத் தடை குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. செலுத்த வேண்டிய சுமார் 21 கோடி ரூபாயை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தி தடையை நீக்கும் உத்தரவைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இது முடிவாகும்.
இதனிடையே, இன்று மாலை சென்னையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த உள்ளார்கள். அதற்கான அழைப்புகள் மீடியா உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.