பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய, ஆர்.வி.உதயகுமார் இப்போது தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக இருக்கிறார். தொடரி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தவர், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். வினோத் இயக்கும் ரெட் லேபிள் படத்திலும் , ஹீரோயின் அப்பாவாக நடித்து இருக்கிறார்.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் அவர் பேசுகையில், ‛‛நான் பல படங்களை இயக்குனர் என்றாலும், நடிக்கும்போது எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன். இயக்குனர் சொல்வதைதான் கேட்பேன். நான் கோவையை சேர்ந்தவன். அந்த ஊர்க்காரர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுக்கவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் கொடுக்கிறார்கள் என்று ஜாலியாக குறிப்பிட்டார். அதேபோல் கடந்த 10, 15 ஆண்டுகளாக தமிழில் மிக சிறந்த படங்கள் அதிகம் வருவது இல்லை. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள் வரவில்லை. ஒரு சாராருக்கு பிடித்த படங்களே அதிகம் வருகின்றன். சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர் தான் கேப்டன். அவர்களை யாரும் தவறாக பேசக்கூடாது. அவர்களுக்கு இழுக்கு வரும்படி நடந்து கொள்ளக்கூடாது'' என்றார்.