Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம்

22 அக், 2025 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Caste-films-by-Tamil-directors-Dhruv-Vikram-explains

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமான சாதியப் படங்கள் வருவதாக ஒரு சர்ச்சை உள்ளது. குறிப்பாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன், மோகன் ஜி ஆகியோர் சாதியை மையமாக வைத்து படங்களை எடுப்பதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'பைசன்'. அப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரமும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரம் தான். கபடி வீரனாக ஆசைப்படும் அந்தக் கதாநாயகனுக்கு சாதி வித்தியாசம் பார்க்காமல் வேறு சாதியைச் சேர்ந்த சிலர் கை கொடுத்து தூக்கி விடுவதாகத்தான் கதை அமைந்திருந்தது. இந்தப் படத்தில் மற்ற சாதியினரின் உதவும் குணத்தையும் காட்டியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

ஆனால், மற்ற மொழிகளில் உள்ளவர்களுக்கு அதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டு. 'பைசன்' படம் இந்த வாரம் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகிறது. அதன் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் துருவ்விடம், தமிழ் இயக்குனர்களின் சாதியப் படம் குறித்த கேள்வியை ஒருவர் எழுப்பினார்.

அதற்கு துருவ் விக்ரம், ““மாரி செல்வராஜ் தனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு சினிமா உருவாக்குகிறார். ஒவ்வொரு இயக்குனருக்கும் தங்கள் கலையை அவர்கள் விரும்பிய வழியில் உருவாக்கும் உரிமை உண்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளில் இதுபோன்ற சமூக சூழல் இருக்கும்போது, அது (சாதியவாதம் பற்றிய படங்கள்) இன்னும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அத்தகைய பிரச்னைகளை விவாதிப்பது முக்கியம், அதோடு இன்னும் நடக்கும் அந்த விஷயங்களுக்கு வெளிச்சம் போட வேண்டும். சினிமா அதைப் பற்றி மக்களை கல்வியூட்டுவதற்கு ஒரு நல்ல ஊடகம் என்று நான் உணர்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம்சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா ... விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் விஜய்யின் 'முரசு' படம் நின்று போக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in