மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னணி இளம் நடிகராக வளர்ந்துள்ளவர் விஜய் தேவரகொண்டா. தனக்கென ரவுடி என்கிற பெயரில் துணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு மிகவும் கை கொடுத்த படமாக அமைந்தது எவடே சுப்பிரமணியம் என்கிற படம் தான். அதை தொடர்ந்து வெளியான அர்ஜுன் ரெட்டி படம் தான் அவரை பிரபலமான ஹீரோவாக்கியது.
ஆனால் எவடே சுப்பிரமணியம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புதிய உடைகள் வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் படப்பிடிப்பில் தான் பயன்படுத்திய உடைகளையே அணிந்து கொண்டு தான் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று சமீபத்தில் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
புதிய படங்களில் அறிமுகமாகும் புதுமுகங்களுக்கு இருக்கும் போராட்டத்தைத் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதால் தான் தற்போது சமீபத்தில் வெளியான லிட்டில் ஹார்ட்ஸ் படத்தின் குழுவினருக்கு தன்னுடைய சொந்த துணி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உடைகளை பரிசாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.