'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி |

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த பட இயக்குனர் விஷால் வெங்கட் இயக்க, அர்ஜூன்தாஸ் நடித்த 'பாம்' படம் நாளை (செப்.,12) வெளியாக உள்ள நிலையில், அடுத்த வாரமே அவர் இயக்கிய படம் ரிலீஸ் ஏன்? வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. அப்படி இருக்க, செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் செய்ய காரணம் என்ன? ஏதாவது அரசியலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.