படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த பட இயக்குனர் விஷால் வெங்கட் இயக்க, அர்ஜூன்தாஸ் நடித்த 'பாம்' படம் நாளை (செப்.,12) வெளியாக உள்ள நிலையில், அடுத்த வாரமே அவர் இயக்கிய படம் ரிலீஸ் ஏன்? வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. அப்படி இருக்க, செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் செய்ய காரணம் என்ன? ஏதாவது அரசியலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.