என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கேபிஒய் பாலா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காந்திகண்ணாடி'. இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஷெரிப். 'காந்திகண்ணாடி படத்துக்கு பேனர் வைக்க விடவில்லை. எங்களுக்கு தியேட்டர் பிரச்னை. நாங்கள் சினிமா கனவுடன் வந்தவர்கள், எங்களை புறக்கணிக்கிறார்கள். எங்களை துரத்தி அடிக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. எங்களை நேரில் அழைத்து 2 அடி கொடுங்க, இப்படி மறைமுகமாக அடிக்காதீங்க' என்று பொங்கியுள்ளார். இந்த பேச்சு வைரல் ஆகியுள்ளது.
யார் தடுக்கிறார்கள் என இயக்குனர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், ஏதோ பிரச்னை என தெரிகிறது. தனது செயல்களால் பாலாவுக்கு நல்ல பெயர். அவர் ஹீரோவாகும் படத்தை தடுப்பது யார்? பேனர் வைக்கவிடாமல் தடைபோடுவது யார்? விரைவில் இது குறித்து பாலா மனம் திறப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
           
             
           
             
           
             
           
            