எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கேபிஒய் பாலா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காந்திகண்ணாடி'. இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஷெரிப். 'காந்திகண்ணாடி படத்துக்கு பேனர் வைக்க விடவில்லை. எங்களுக்கு தியேட்டர் பிரச்னை. நாங்கள் சினிமா கனவுடன் வந்தவர்கள், எங்களை புறக்கணிக்கிறார்கள். எங்களை துரத்தி அடிக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. எங்களை நேரில் அழைத்து 2 அடி கொடுங்க, இப்படி மறைமுகமாக அடிக்காதீங்க' என்று பொங்கியுள்ளார். இந்த பேச்சு வைரல் ஆகியுள்ளது.
யார் தடுக்கிறார்கள் என இயக்குனர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், ஏதோ பிரச்னை என தெரிகிறது. தனது செயல்களால் பாலாவுக்கு நல்ல பெயர். அவர் ஹீரோவாகும் படத்தை தடுப்பது யார்? பேனர் வைக்கவிடாமல் தடைபோடுவது யார்? விரைவில் இது குறித்து பாலா மனம் திறப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.