2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு |

சினிமா தொடங்கிய காலத்தில் வசனங்கள் பாடல்களாகவே இருந்தது. பின்னர் நீட்டி முழக்கி கவிதையாக பேசினார்கள். பின்னர் பக்கம் பக்கமாக பேசினார்கள். பின்னர் சாதாரண தமிழில் பேசினாலும் வளவளவென பேசினார்கள். இந்த பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு 'நறுக்' வசனங்களால் உருவான படம் 'பகல்நிலவு'.
மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ் படம். ஊரையே ஏமாற்றி வெளியில் நல்லவன் வேஷம் போடும் வில்லன் சத்யராஜை எதிர்த்து ஹீரோ முரளி மக்களை திரட்டி போராடுகிற சாதாரண கதைதான்.
ஆனால் இளையராஜாவின் இசை, ராமச்சந்திர பாபுவின் ஒளிப்பதிவு, பி.லெனின் எடிட்டிங் இவற்றோடு சேர்ந்து நறுக் வசனமும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதனால் தன்னுடைய எல்லா படத்திலும் நறுக் வசங்களையே பயன்படுத்தினார் மணிரத்னம். 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு இந்த பாணியை மாற்றிக் கொண்டார்.