அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

2025 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா', ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'அடங்காதே' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 27ம் தேதியும், அதர்வா நடித்துள்ள 'தணல்' படம் ஆகஸ்ட் 29ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படங்கள் வருமா, வராதா என்பது பற்றி எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. கடந்த சில நாட்களாக எந்த விளம்பரங்களும் வரவில்லை என்பதால் நிச்சயம் இந்தப் படங்கள் வெளிவராது.
அதேசமயம், ஆகஸ்ட் 27ல் கடுக்கா என்ற படம் மட்டும் வெளியாகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி சில சிறிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அசுர மனிதன், கிப்ட், குற்றம் புதிது, நறுவீ, சொட்ட சொட்ட நனையுது, வீர வணக்கம், பேய்கதை ' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மலையாளம், தமிழில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் 'பல்டி' படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடம் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடக்கிறது. இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எப்படியும் 75 படங்களாவது வெளியாக வாய்ப்புள்ளது.