ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் படம் ‛தி ராஜா சாப்'. இயக்குனர் மாருதி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில் நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்துள்ள பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், “ஜூலை ஷெட்யூலுக்கான பணப்பட்டுவாடா தாமதமாகி இருக்கிறது என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம். இது சமீபத்தில் திடீரென ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாக ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ஏற்பட்ட தாமதம் தான். கடந்த 12 மாதங்களில் நாங்கள் தினசரி கூலி தொழிலாளர்களுக்காக 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுத்திருக்கிறோம். இன்னும் ஒரு கோடி மட்டுமே பாக்கி இருக்கிறது. தற்போது போராட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏற்படப் போகும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த வாரத்திலேயே அந்தத் தொகையையும் கொடுத்துவிட தீர்மானித்துள்ளோம். ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது கடின உழைப்புக்கான தொகை கவுரவத்துடன் சென்று சேர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.