Advertisement

சிறப்புச்செய்திகள்

வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை

01 ஆக, 2025 - 01:54 IST
எழுத்தின் அளவு:
Mistake-in-award-presentation-Actress-breaks-down-in-tears-on-stage

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர்தான் அனுஸ்ரீ. மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு பெயர் போன இவர் பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு துணிக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகை அனுஸ்ரீ. ஏற்கனவே இந்த திறப்பு விழா தொடர்பாக அறிவிக்கப்பட்ட பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசை அறிவித்து அனுஸ்ரீ அதை தனது கையால் வழங்குவதாக விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்படி பரிசு பெற்ற அவரின் பெயரை அறிவித்த போது அதே பெயர் கொண்ட ஒரு வயதான மனிதர் பரிசை பெறுவதற்காக மேடைக்கு ஏறி வந்தார். ஆனால் பரிசு பெற்ற நபர் அவர் இல்லை என்றும் வேறு ஒரு நபர் என்றும் தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்துடன் அந்த வயதான மனிதர் கீழே இறங்கி சென்றார். இந்த நிகழ்வை கண்டதும் இளகிய மனம் கொண்ட நடிகை அனுஸ்ரீ தனது கண்களில் கண்ணீரை அடக்க முடியாமல் பின்பக்கமாக திரும்பி அழ ஆரம்பித்தார்.

இதனை புரிந்து கொண்ட அந்த துணிக்கடை அதிபர் உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த வயதான நபருக்கும் ஆறுதல் பரிசாக ஒரு குறிப்பிட்ட தொகையை தன் கைப்படவே அளித்தார். அந்த வயதானவருக்கு பரிசு கிடைத்த பின்னரே நடிகை அனுஸ்ரீயின் முகத்தில் சந்தோசம் பிறந்தது. அதன்பிறகு பேசிய அனுஸ்ரீ, “இந்த மனிதருக்கு ஏதாவது ஒரு சிறிய தொகையை பரிசாக இன்று கொடுத்திருக்காவிட்டால் என்னால் இன்று இரவு நிம்மதியாக உறங்கி இருக்க முடியாது” என்று நெகிழ்வுடன் கூறினார். இந்த நிகழ்வு அங்கே கூடியிருந்த பார்வையாளர்களையும் மனம் நெகிழ செய்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபுஇலங்கை சுற்றுப்பயணத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in