ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் பஹத் பாசில். அவருடைய பல மலையாளப் படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் பார்த்து ரசிப்பது வழக்கம். 'வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், வேட்டையன்' படங்களைத் தொடர்ந்து நேற்று வெளியான 'மாரீசன்' தமிழ்ப் படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார்.
எந்த மொழி நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது ரசிகர்களாக இருப்பார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'பாட்ஷா' படம் பார்த்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
“"நான் ஊட்டியில் 9 அல்லது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாலையில் நாங்கள் பள்ளியை விட்டு வெளியேறி பாட்ஷாவைப் பார்த்தோம். மக்கள் நிறைந்திருந்த நிலையில் நான் பார்த்த முதல் தமிழ் படம் அது. ஒரு சூப்பர் ஸ்டார் திரையில் இவ்வளவு நேர்மையாக இருப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்தப் படத்தின் காட்சிகளில் ஒரு அமைப்பு இருக்கும். அவர் தனது சகோதரியின் சேர்க்கைக்காகச் செல்லும் பிரபலமான காட்சி உள்ளது. அவர், "ஐயா, என் பேரு மணிக்கம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு" என்று கூறுவார். பின்னர் அவர் கேபினிலிருந்து வெளியே வந்து, சகோதரியிடம் அனுமதி கிடைத்துவிட்டதாகக் கூறுவார். அவரது சகோதரி அவரிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்க, அதற்கு அவர், "உண்மைய சொன்னேன்" என்று பதிலளிப்பார். அதைக் கேட்டு நான் மிகவும் பிரமித்துப் போனேன். பார்வையாளர்களிடம் ஒரு தொடர்பு உணர்வு இருந்தது. அந்த புள்ளி ஒரு பெரிய உச்சமாக இருந்தது,” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
ரஜினியுடன் பஹத் பாசில் 'வேட்டையன்' படத்தில் இணைந்து நடித்திருந்தாலும், அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாமல் போய்விட்டது.