மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! |

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் பஹத் பாசில். அவருடைய பல மலையாளப் படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் பார்த்து ரசிப்பது வழக்கம். 'வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், வேட்டையன்' படங்களைத் தொடர்ந்து நேற்று வெளியான 'மாரீசன்' தமிழ்ப் படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார்.
எந்த மொழி நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது ரசிகர்களாக இருப்பார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'பாட்ஷா' படம் பார்த்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
“"நான் ஊட்டியில் 9 அல்லது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாலையில் நாங்கள் பள்ளியை விட்டு வெளியேறி பாட்ஷாவைப் பார்த்தோம். மக்கள் நிறைந்திருந்த நிலையில் நான் பார்த்த முதல் தமிழ் படம் அது. ஒரு சூப்பர் ஸ்டார் திரையில் இவ்வளவு நேர்மையாக இருப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்தப் படத்தின் காட்சிகளில் ஒரு அமைப்பு இருக்கும். அவர் தனது சகோதரியின் சேர்க்கைக்காகச் செல்லும் பிரபலமான காட்சி உள்ளது. அவர், "ஐயா, என் பேரு மணிக்கம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு" என்று கூறுவார். பின்னர் அவர் கேபினிலிருந்து வெளியே வந்து, சகோதரியிடம் அனுமதி கிடைத்துவிட்டதாகக் கூறுவார். அவரது சகோதரி அவரிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்க, அதற்கு அவர், "உண்மைய சொன்னேன்" என்று பதிலளிப்பார். அதைக் கேட்டு நான் மிகவும் பிரமித்துப் போனேன். பார்வையாளர்களிடம் ஒரு தொடர்பு உணர்வு இருந்தது. அந்த புள்ளி ஒரு பெரிய உச்சமாக இருந்தது,” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
ரஜினியுடன் பஹத் பாசில் 'வேட்டையன்' படத்தில் இணைந்து நடித்திருந்தாலும், அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாமல் போய்விட்டது.