என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும் அவரை சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள். விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ள வினோத் கூட ரஜினியை இயக்க கதை சொல்லி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது குரங்கு பொம்மை, மகாராஜா படங்களை இயக்கிய நித்திலன் சுவாமிநாதனும் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டதை அடுத்து ஸ்கிரிப்ட் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதனால் ஜெயிலர்- 2 படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 173 வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் மகாராஜா படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை இயக்குவதற்காகவும் அவர் ஒரு கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரஜினி, விஜய் சேதுபதி இருவரில் யாரை அடுத்தபடியாக நித்திலன் சுவாமிநாதன் இயக்கப் போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.