கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீப நாட்களாகவே மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான மரியூபன்ச் சவு என்கிற நடனத்தை கற்றுக் கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரபல நடந்த கலைஞரான விக்கி பார்தியா தான் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த நடனத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்கி பார்த்தியா. இது குறித்து அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவுடன் பணி புரிந்தது உண்மையிலேயே சிறப்பான அனுபவம். அவர் ரொம்பவே துறுதுறுப்பான, வேடிக்கையான, பலமான, தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் அன்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபர். நடன ஒத்திகையின் போதும் படப்பிடிப்பில் நடன காட்சிகளை படமாக்கும் போதும் அவருடைய எனர்ஜியை பார்க்கும் போது நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது. தன்னுடைய அனைத்து விதமான கடின உழைப்பையும் அவர் கொடுத்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.