‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீப நாட்களாகவே மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான மரியூபன்ச் சவு என்கிற நடனத்தை கற்றுக் கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரபல நடந்த கலைஞரான விக்கி பார்தியா தான் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த நடனத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்கி பார்த்தியா. இது குறித்து அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவுடன் பணி புரிந்தது உண்மையிலேயே சிறப்பான அனுபவம். அவர் ரொம்பவே துறுதுறுப்பான, வேடிக்கையான, பலமான, தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் அன்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபர். நடன ஒத்திகையின் போதும் படப்பிடிப்பில் நடன காட்சிகளை படமாக்கும் போதும் அவருடைய எனர்ஜியை பார்க்கும் போது நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது. தன்னுடைய அனைத்து விதமான கடின உழைப்பையும் அவர் கொடுத்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.