ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி |

தமிழ் கலாசாரத்தில் அண்ணி உறவிற்கு தனி மவுசு உண்டு. அண்ணன் மனைவி என்றாலும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணி, இன்னொரு அன்னை என்பார்கள். 1950களுக்கு முன்பு வந்த சமூக திரைப்படங்களில் அண்ணி உறவு அவ்வப்போது சில காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. புராண படங்களில் சீதை, லட்சுமணனுக்கு அண்ணி என்பதால் அதுகுறித்த காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அண்ணி என்ற உறவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவான முதல் படம் 'அண்ணி'. தன் கணவரின் கடைசி தம்பியை, பெற்ற மகன் போல் பாதுகாத்து வளர்க்கும் ஒரு அண்ணி சந்திக்கும் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்தான் கதை. அண்ணியாக ஜி.வரலட்சுமி நடித்தார், தம்பி என்கிற சிறுவனாக மாஸ்டர் சேது நடித்தார். இவர்கள் தவிர காந்தாராவ், சுந்தராவ், அன்னபூர்ணா கமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கே.எஸ்.பிரகாஷ் ராவ் தயாரித்து, இயக்கினார், பெண்டியாலா இசை அமைத்திருந்தார். தெலுங்கு கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் தமிழிலும் தயாரானது. ஆனால் தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னாளில் இதே பெயரில் தமிழில் பல படங்கள் வந்தது, 'அண்ணி' என்கிற தொலைக்காட்சி தொடரும் மிகவும் பிரபலமானது.