போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
தமிழ் கலாசாரத்தில் அண்ணி உறவிற்கு தனி மவுசு உண்டு. அண்ணன் மனைவி என்றாலும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணி, இன்னொரு அன்னை என்பார்கள். 1950களுக்கு முன்பு வந்த சமூக திரைப்படங்களில் அண்ணி உறவு அவ்வப்போது சில காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. புராண படங்களில் சீதை, லட்சுமணனுக்கு அண்ணி என்பதால் அதுகுறித்த காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அண்ணி என்ற உறவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவான முதல் படம் 'அண்ணி'. தன் கணவரின் கடைசி தம்பியை, பெற்ற மகன் போல் பாதுகாத்து வளர்க்கும் ஒரு அண்ணி சந்திக்கும் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்தான் கதை. அண்ணியாக ஜி.வரலட்சுமி நடித்தார், தம்பி என்கிற சிறுவனாக மாஸ்டர் சேது நடித்தார். இவர்கள் தவிர காந்தாராவ், சுந்தராவ், அன்னபூர்ணா கமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கே.எஸ்.பிரகாஷ் ராவ் தயாரித்து, இயக்கினார், பெண்டியாலா இசை அமைத்திருந்தார். தெலுங்கு கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் தமிழிலும் தயாரானது. ஆனால் தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னாளில் இதே பெயரில் தமிழில் பல படங்கள் வந்தது, 'அண்ணி' என்கிற தொலைக்காட்சி தொடரும் மிகவும் பிரபலமானது.