சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 50வது பிறந்த நாளையொட்டி சென்னையில் பெரிய இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை, ‛‛நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காது. சுவையான அதை அவர் ஏன் விரும்பவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. சின்ன வயதில் அவரது அம்மாவை இழந்தவர். அம்மா மறைவையொட்டி பள்ளியில் இருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். முத்துக்குமார் அழக்கூடாது என்பதற்காக அந்த வழியாக சென்ற லாரியில் இருந்து கீழே விழுந்த கரும்பை உடைத்து கொடுத்து இருக்கிறார்கள். அதை சுவைத்துக் கொண்டே அம்மா உடலை பார்த்து இருக்கிறார் நா.முத்துக்குமார். அதன்பின் கரும்பை பார்க்கும் போதெல்லாம், அவருக்கு அம்மா நினைவு வந்து இருக்கிறது. அதனால் அவர் கரும்பு சாப்பிடுவதில்லை என்று புது தகவல் சொன்னார் பவா சொல்லத்துரை. பெரும்பாலும் அவர் பாடல்களை எழுத சென்னையில் இருந்து காரில் ஆம்பூர் செல்வார். அங்கே பிரியாணி சாப்பிட்டு விட்டு திரும்புவார். அதற்குள் பாடல் எழுதிவிடுவார் என அவர் நண்பர்கள் பகிர்ந்தனர்.