தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மறைந்த விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் 80களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். கிராமப்புறங்களில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் இருக்கிறதோ இல்லையோ விஜயகாந்த் ரசிகர் மன்றம் கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை அந்தக் காலத்தில் இருந்தது.
வழக்கம் போல அவரது வாரிசும் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது இரண்டாவது மகனான சண்முகப்பாண்டியன் 2015ல் வெளிவந்த 'சகாப்தம்' படம் மூலம் கதாநாகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'மதுர வீரன்' படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாகப் பேசப்படவில்லை. மூன்றாவது படமாக அவர் நடித்துள்ள 'படை தலைவன்' படம் நாளை வெளியாக உள்ளது.
இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகத்தான் நடித்துள்ளார். விஜயகாந்த் ரசிகர்கள் வந்து பார்த்தாலே படம் வெற்றிப் படமாக அமைந்துவிடும். படம் நன்றாக இருந்தால் மற்ற ரசிகர்களும் வந்து படம் பார்ப்பார்கள். கடந்த பத்து வருடங்களில் மூன்றே படங்களில் நடித்துள்ள சண்முகப்பாண்டியன் இந்த 'படை தலைவன்' படம் மூலம் வெற்றியைப் பதிவு செய்வாரா என திரையுலகினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்தப் படத்துடன் நாளைய வெளியீடாக 'கட்ஸ், ஹோலோகாஸ்ட்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும் வெளியாக உள்ளன.