ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! |

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‛கொம்பு சீவி' படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சரத்குமார். அவர் விஜயகாந்த் குறித்து கூறுகையில் ''நான் ஒரு கட்டத்தில் படம் தயாரித்து மிகவும் சோர்வாக இருந்த சமயத்தில் விஜயகாந்திடம் இருந்து அழைப்பு வந்தது. என்னை புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் வாய்ப்பு கொடுத்தார். அந்தசமயத்தில் எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். பல மாதங்கள் படப்பிடிப்பு செல்ல முடியாத நிலை. எனக்கு அதில் சின்ன ரோல்தான். என் காட்சிகளை நீக்கிவிட்டு, மற்றொரு நடிகரை வைத்து படத்தை முடித்து இருக்க முடியும். ஆனால், எனக்காக சில மாதங்கள் காத்திருந்து நடிக்க வைத்தார். புலன் விசாரணை படம் பார்த்துவிட்டு உங்களுக்கு புகழ் கிடைக்கும் என்றார். எந்த ஹீரோவும் சொல்லாத வார்த்தை அது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் நடித்து இருக்கிறேன். நாங்கள் சாப்பாட்டை பரிமாறிக் கொள்வோம். அவர் உயரமாக இருக்கிறார். அவரை தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் என்பேன். அவருக்கும், ஹீரோயினுக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது''என்றார்.