விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பூர்ணிமா பாக்யராஜ், அவர் மகன் சாந்தனு ஆகியோர் சந்தித்து பேசியிருக்கின்றனர். அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களை அம்மாவும், மகனும் சந்திக்க என்ன காரணம் என்று விசாரித்தால் இயக்குனர் கே. பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதை முன்னிட்டு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி, கமல் இல்லாமல் தமிழ் சினிமாவில் பாராட்டு விழாவா? தவிர, பாக்யராஜ், பூர்ணிமாவுடன் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த நட்பின் அடிப்பையில் நேரில் போய் அழைப்பு விடுத்ததாக தகவல்.
அந்த விழாவில் பாக்யராஜ் டீமில் பணியாற்றவர்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், அவரின் நண்பர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன் இன்னும் சில மாதங்களில் அந்த பாராட்டு விழா நடக்க உள்ளது. பாக்யராஜ் நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' 1979ல் வெளியானது. ஆனால், '16 வயதினிலே' காலத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அவர் வேலை செய்து இருக்கிறார் பாக்யராஜ். அதற்கு முன்பும் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இருக்கிறார். அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டை தொட்டுவிட்டார்.