ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தமிழ் சினிமாவில் மதமாற்றம், அதன் பின்னணி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய கதைகள் வெகு குறைவு. தமிழகத்தில் இப்படிப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பு வரும். அரசின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும், பல அமைப்புகள் கொடி பிடிக்கும் என்பதால் அதை கையில் எடுக்க பலர் தயங்கினார்கள். ஆனால், இசக்கி கார்வண்ணன் இந்த பிரச்னையை மையமாக வைத்து பரமசிவன் பாத்திமா படத்தை எடுத்து இருக்கிறார்.
பரமசிவனாக நடிகர் விமலும், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய குடும்பத்தை சேர்ந்த பாத்திமாவாக சாயாதேவியும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் கொல்லப்பட, ஆவியாகி என்ன செய்கிறார்கள் என்பது கதை. பாத்திமா தந்தையாக நடித்த இயக்குனர் மனோஜ்குமார் ஆசிரியர் வேலைக்கு ஆசைப்பட்டு மதம் மாறுகிறார். திருச்சபை செல்கிறார். ஆனால், மேளச்சத்தம் கேட்டால், வெள்ளி செவ்வாய் என்ற பழசை மறக்க முடியாமல் வீட்டில் நான் சுடலை வந்து இருக்கேன் என்று சாமி ஆடுகிற காட்சியும் படத்தில் இடம் பிடித்துள்ளது.
மத மாற்றம் சம்பந்தப்பட்ட பல வசனங்களும் இடம் பிடித்துள்ளது. பல வசனங்கள் சென்சாரால் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சேரன் நடித்த, ஜாதி கொடுமையை சொல்லும் தமிழ்குடிமகன் படத்தை இயக்கியவர் இசக்கி கார்வண்ணன்.