சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

தமிழ் சினிமா ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்ரீப்ரியா, சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக் என மூன்று தலைமுறை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
ஆனால் அவர் சில படங்களை இயக்கவும் செய்தார். 1984ம் ஆண்டு 'சாந்தி முகூர்த்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் நடித்த 'ஆட்டுக்கார அலமேலு' படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் 'எங்க ஊரு ஆட்டுக்காரன் 'என்ற படத்தை இயக்கினார். 
தொடர்ந்து தமிழில் 'நானே வருவேன், மாலினி 22 பாளையங்கோட்டை' படங்களை இயக்கினார். 'நாகினி' என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த 'திரிஷ்யம்' படத்தை தெலுங்கில் இயக்கினார். 
 
           
             
           
             
           
             
           
            