பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் |

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, உருவாக உள்ளதாக 2022ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட படம் 'வாடிவாசல்'. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
பலருக்கும் எழுந்த சந்தேகத்துக்கிடையில் இந்த வருடப் பொங்கல் சமயத்தில் வெற்றிமாறன், சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது,' என்ற அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு.
அதன்பின் மார்ச் மாதத்தில் வெற்றிமானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பாடல் பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
இப்போது 'வாடிவாசல்' படம் டிராப் ஆகிறது என மீண்டும் ஒரு தகவல் பரவி வருகிறது. சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவிக்கும் வரை எதுவும் உண்மையில்லை என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.