பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது அந்தபடம் சற்று முன்னதாகவே அக்டோபர் 1ம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த தேதியில் தனுஷின் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டில் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனும் சிக்கினார். இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதனால் அன்றைய தேதியில் சூர்யா 45 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்.