திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது அந்தபடம் சற்று முன்னதாகவே அக்டோபர் 1ம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த தேதியில் தனுஷின் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டில் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனும் சிக்கினார். இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதனால் அன்றைய தேதியில் சூர்யா 45 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்.