சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது அந்தபடம் சற்று முன்னதாகவே அக்டோபர் 1ம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த தேதியில் தனுஷின் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டில் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனும் சிக்கினார். இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதனால் அன்றைய தேதியில் சூர்யா 45 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்.




