அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த 'கராத்தே கிட்' படம் பெரிய வெற்றி பெற்றது. ஒரு சாதாரண ஆப்ரிக்க சிறுவனை கராத்தே சேம்பியன் ஆக்கும் ஒரு குருவின் கதை. இதில் குருவாக ஜாக்கிசான் நடித்திருந்தார். அதற்கு பிறகு 'கராத்தே கிட்' என்ற பெயரில் ஏராளமான படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாக இருக்கும் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' என்கிற படம்தான் அதன் நேரடி தொடர்ச்சியான படம்.
இந்த படத்தை ஜோனாதன் என்ட்விஸ்டல் இயக்கி உள்ளார். இதில் முதல் பாகத்தில் நடித்த ஜாக்கி சான் மற்றும் ரால்ப் மச்சியோ ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பென் வாங்கை ஜோசுவா ஜாக்சன், சாடி ஸ்டான்லி மற்றும் மிங்-நா வென் ஆகியோரும் நடித்துள்ளனர். கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கடந்த மே 8ம் தேதி மெக்சிகோ நகரில் திரையிடப்பட்டது, வருகிற 30ம் தேதி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியிடப்படுகிறது.
ஹிந்தி பதிப்பில், ஜாக்கி சான் நடித்த மிஸ்டர் ஹான் எனும் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கன் குரல் கொடுத்துள்ளார்; அவரது மகன் யுக் தேவ்கன் லி பாங் எனும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளார். நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இந்த படம், புதிதாக பள்ளியில் சேரும் 'குங் பூ' மாணவன் லி பாங் தனது புதிய சூழலுக்கு ஏற்றபடி எவ்வாறு இணைகிறார், அங்கு ஏற்படும் எதிர்பாராத நட்புகள், ஒரு உள்ளூர் கராத்தே சாம்பியனுடன் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.
அவரது ஆசிரியரான மிஸ்டர் ஹான் (ஜாக்கிசான்) மற்றும் மைதானத்தில் புகழ்பெற்ற டேனியல் லாரூசோ (ரால்ப் மேக்கியோ) ஆகியோரின் வழிகாட்டுதலால், லி பாங் தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் தன்மை, தைரியம் மற்றும் வளர்ச்சி அடையும் பயணத்தை எப்படி மேற்கொள்கிறார் என்பதைப் பற்றியும் பேசுகிறது இந்த படம். இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.