‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கோமாலி பிரசாத். நீனு சீதா தேவி, நெப்போலியன், ரவுடி பாய்ஸ் என பல படங்களில் நடித்தவர் ஹிட் : செகண்ட் கேஸ், தேர்ட் கேஸ் படங்களின் மூலம் புகழ்பெற்றார். தற்போது 'சசிவதனே' என்ற படத்தில் நடித்து வருகிறார். கோமாலி பிரசாத் அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கனை. அதனால்தான் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "என்னுடைய ரிங் டோனே 'நானும் ரெளடிதான்' படத்தில் இருந்து 'நீயும் நானும்...' பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்போன்ஸ் புத்திரன், மணிகண்டன் படங்களில் பணிபுரிய ஆசை. அதேபோல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் பேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன். நான் நடிக்கும் தமிழ் படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் " என்றார்.