கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. படமும் ரசிகர்களை வெகுவாகக் கவரவில்லை. இருந்தாலும் படம் வெளியான மறுநாள் படத்தின் முதல் நாள் வசூல் 46 கோடி எனவும், அதற்கடுத்து நான்கு நாட்களுக்குப் பிறகு 100 கோடி வசூல் என்றும் அறிவித்தார்கள். அதன்பிறகு வசூல் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நேற்று 235 கோடி வசூல் என்ற அறிவிப்பு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு வசூலில் மிகவும் தடுமாறிய படம் எப்படி 235 கோடி வசூலைப் பெற்றது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், நேற்று வெளியிட்ட போஸ்டரில் 235 க்குப் பக்கத்தில் '*' 'ஆஸ்ட்டரிக்ஸ்' குறியீடு ஒன்று இருந்ததை சிலர் கவனிக்கத் தவறினார்கள்.
போஸ்டரின் பக்கத்தில் அதற்குரிய விளக்கம் இடம் பெற்றுள்ளது. “தியேட்டர் மற்றும் தியேட்டர் அல்லாத வருவாய்' என்பதே அது. தியேட்டர் வசூல், ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை இன்ன பிற உரிமைகளுடன் சேர்த்துத்தான் 235 கோடி என்பதுதான் நேற்று வெளியான போஸ்டரின் உண்மைக் காரணம். ஆக, 'ரெட்ரோ' படத்தால் தங்களுக்கு லாபம்தான் என தயாரிப்பு நிறுவனம் மறைமுகமாகச் சொல்ல முயற்சிக்கிறது.