பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஜூலை மாதம் திரைக்கு வருகிற படம் 'கிங்டம்'. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார், கவுதம் தின்னூரி இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்திற்கான புரொமோசன் நிகழ்ச்சிக்காக தமிழில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, " அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போது அனிருத் பாட்டு எனக்குத்தான் வந்துள்ளது. ஒரு முறை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் போயிருந்தேன். அப்போ அந்த மெஷினுக்குள்ள என்ன அனுப்பிட்டாங்க. ஆனா நான் அனிருத் பாட்டு போடுங்கன்னு கேட்டு மெஷினுக்குள்ள வைப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ நானும் அனியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்." என தெரிவித்துள்ளார்.