ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், துணை முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் அப்போது நடந்து வந்தது. கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அப்படங்களில் நடிப்பதைத் தள்ளிப் போட்டார்.
பின்னர் 'ஹரிஹர வீர மல்லு' படத்தில் கலந்து கொண்டு நடித்தார். பிறகு அரசுப் பணிகள் நிறைய இருந்ததால் படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்தார். அவர் சில நாட்கள் நடித்துக் கொடுத்தால் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இன்று முதல் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இன்னும் நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைவதால் படத்தை மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இப்படத்தை ஏற்கெனவே மே 9 வெளியீடு என அறிவித்திருந்தார்கள். இப்படத்தை முடித்த பிறகு அவர் 'ஓஜி' படத்தில் நடிக்கத் தேதி கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்று நின்று நடந்து வருகிறது. அவர் 25 நாள் தேதி தந்தால் படத்தை முடித்துவிடுவார்களாம். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் 'ஓஜி' படமும் இந்த வருடத்தில் வெளியாகிவிடும்.