காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஒரு படத்திற்கு கதைக்கு பொருத்தமான தலைப்பு வைப்பதும் பின்னர் அந்த தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பி மாற்றப்படுவதும் அவ்வப்போது நடந்து வந்துள்ளது. ரஜினி படத்திற்குமே அது நடந்தது. அந்தப் படம் 'நான் மகான் அல்ல'.
கே. பாலச்சந்தர் குடும்பப் பாங்கான படங்களை இயக்கி வந்த போதும் அவ்வப்போது எஸ்.பி.முத்துராமன் - ரஜினி காமினேஷனில் பக்கா கமர்சியல் படங்கள் தயாரித்தார். இப்படி தயாரிக்கப்பட்ட ஒரு படம் தான் 'நான் மகான் அல்ல'. 1984ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ரஜினியுடன் ராதா, நம்பியார், சத்யராஜ், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு முதலில் 'நான் காந்தி அல்ல' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தின் நாயகன் தானே வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு தண்டிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் காந்தி போல நானும் அஹிம்சையை கடைப்பிடிப்பவன் அல்ல குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்துடையவன் .
எனவே இந்த படத்தின் தலைப்பு மகாத்மா காந்தியை அவரது கருத்துக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து படத்தின் தலைப்பு 'நான் மகான் அல்ல' என்று மாற்றப்பட்டது. படத்தில் காந்தி குறித்து அமைக்கப்பட்ட வசனங்களும் நீக்கப்பட்டது. படம் வெளியாகி 100 நாட்களை தாண்டி ஓடியது.