சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா எம்ஜிஆருக்கு முன்னரே சினிமாவுக்கு வந்தவர். நாடகங்களில் வில்லனாக நடித்த அவர் திரைப்படங்களிலும் பெரும்பாலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அவற்றில் முக்கியமானது 'சண்பகவல்லி'.
இது விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். இந்தப் படத்தை லங்கா சத்யம் இயக்கியிருந்தார் . பாலையா ஜோடியாக பெரியநாயகி நடித்தார். இவர்களுடன் கேகே பெருமாள், ராஜகோபால ஐயர், ஏழுமலை சீனிவாசன், எம் எஸ் விஜயா, விஜயவாடா ராஜாராம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
ஸ்ரீ கந்தர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் டி எஸ் பாலையா ரொமான்ஸ் மட்டும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார், என்றாலும் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.




