பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்மணி, அரவிந்தராஜ் போன்ற இயக்குனர்கள், பி.சி.ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்கள் திரைப்படக்கல்லூரியில் இருந்து வந்தவர்கள். ஆனால் அதன்பிறகு அவர்கள் ஆதிக்கம் குறைந்து விட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 'கீனோ' என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரியில் இயக்குதல் துறையில் படித்து முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கிறார்.
படம் குறித்து அவர் கூறும்போது, "இதுவரை நாவல்களிலோ, திரைப்படங்களிலோ சொல்லப்படாத கதை கருவும், கீனோ என்ற கதாபாத்திரமும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும், புதுமையானதாகவும் இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கிருத்திகா காந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் கல்லூரியில் முதல் மாணவர்களாக திரைப்பட விருது பெற்றவர்கள் ஆவார்கள்", என்றார்.
படத்தில் மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி ஆகியோருடன் பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். ஆலிவர் டென்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.திவாகர் இசை அமைத்துள்ளார்.படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.