‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர் | மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா | ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா | 47வது படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா | அரசன் பட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி | தாத்தாவாக நடிக்க மாட்டேன், அப்பாவுடன் நடிக்க ஆசை : விக்ரம் பிரபு | ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய ஜீ தமிழ் | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஐந்து அணிகள் மோதல் | கிரிக்கெட் வெப் தொடரில் அறிமுகமாகும் விக்ராந்த் |

‛கங்குவா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‛ரெட்ரோ'. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கலந்த காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரெட்ரோ படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரெட்ரோ கதையை உருவாக்கினேன். இந்த கதை எழுதும்போது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாகதான் இருந்தது. ஆனால் அதையடுத்து சூர்யா கால்ஷீட் கிடைத்ததால் ரஜினிக்கு எழுதிய அதே கதையில் காதலை கலந்து ரெட்ரோவாக உருவாக்கினேன்'' என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.




