விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
‛கங்குவா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‛ரெட்ரோ'. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கலந்த காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரெட்ரோ படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரெட்ரோ கதையை உருவாக்கினேன். இந்த கதை எழுதும்போது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாகதான் இருந்தது. ஆனால் அதையடுத்து சூர்யா கால்ஷீட் கிடைத்ததால் ரஜினிக்கு எழுதிய அதே கதையில் காதலை கலந்து ரெட்ரோவாக உருவாக்கினேன்'' என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.