தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
தற்போது ரஜினி நடிப்பில் ‛கூலி' படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக கார்த்தி நடிப்பில் ‛கைதி-2' படத்தை இயக்குவார் என்றுதான் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இணைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்க போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கூலி படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். ‛மதராஸி' படத்தை அடுத்து தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்து முடித்ததும் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். மேலும், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ‛3' என்ற படத்தில்தான் தனுஷின் நண்பனாக காமெடி ரோலில் சிவகார்த்திகேயன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.