தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்கள் கூட கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால் நகைச்சுவை நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு நகைச்சுவையில் 'டிரென்ட் செட்டர்'களாக இருந்த வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்தனர்.
அதனால், ஏற்பட்ட இடைவெளியில் சூரி, யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக மக்கள் மனதில் குறிப்பிடும் அளவிற்கு இடம் பிடித்தனர். ஒரு 'டிரென்ட்'டை அவர்கள் உருவாக்குவதற்கு முன்பாகவே கதையின் நாயகர்களாக நடிக்க அவர்களும் போய்விட்டார்கள்.
'விடுதலை' படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் சூரி. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'மாமன்' மே 16ம் தேதி வெளியாகிறது. அடுத்து அவர் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. யோகி பாபு இரண்டு பாதையிலும் பயணித்து வருகிறார்.
இதனிடையே, கதாநாயகர்களாக மாறிய வடிவேலு, சந்தானம் தற்போது இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த 'கேங்கர்ஸ்' அடுத்த வாரம் வெளியாகிறது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' மே 16ம் தேதி வெளியாகிறது.
அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க வேண்டிய படங்களை தள்ளி வைத்துள்ளாராம் சந்தானம். ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள 49வது படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம் சந்தானம். அதற்காக அவருக்கு கதாநாயகனாக அவர் வாங்கும் சம்பளத்தைத் தருகிறார்களாம். தன்னை அறிமுகப்படுத்திய சிம்புவுக்காக சம்மதம் சொல்லியிருக்கிறார் சந்தானம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களாகப் பெயர் வாங்கிய வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோரிடையே இப்படியான மாற்றம் திரையுலகம் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது.