தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன்னிடம் அனுமதி பெறாமல் அதைப் பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு, பகிரங்க மன்னிப்பு, பாடல்களை நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்.
இளையராஜா சார்பில் பேசிய அவரது வழக்கறிஞர்கள், அவரது அனுமதி இல்லாமல் பாடலை உருமாற்றம் செய்திருக்கிறார்கள். காப்புரிமை சட்டத்தின்படி அப்படி செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இன்று மதியம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ இளையராஜாவின் நோட்டீஸ் பற்றி பதில் விளக்கம் தருவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பொனி இசையமைத்து உலகமே வியக்கும் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு எந்தவிதமான நன்றியும் தெரிவிக்காமலும், முறையான அனுமதி பெறாமலும் 'குட் பேட் அக்லி'யில் பாடல்களைப் பயன்படுத்தி இருந்தால் அது தவறானது என சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.