கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர் | லோகா படப்பிடிப்பின் போது வீட்டுக்கு செல்வதையே தவிர்த்தேன் ; சாண்டி | ஹிந்தியில் ஹீரோ கிடைக்காததால் மிராஜ் படத்தை மலையாளத்தில் இயக்கினேன் ; ஜீத்து ஜோசப் | தாராளமாக வெளியேறலாம் ; பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் கோபம் காட்டிய மோகன்லால் | ‛வட சென்னை 2' வில் தனுஷ் : வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது | குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் | முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! |
கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மீது மான்வேட்டை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து பிஷ்னோய் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் கருப்பு நிற மான்களை சல்மான்கான் வேட்டையாடியதால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அதே போன்று மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக மும்பை போலீசில் தெரிவித்திருக்கும் சல்மான்கான், தனது குடும்பத்தாரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.