தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மீது மான்வேட்டை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து பிஷ்னோய் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் கருப்பு நிற மான்களை சல்மான்கான் வேட்டையாடியதால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அதே போன்று மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக மும்பை போலீசில் தெரிவித்திருக்கும் சல்மான்கான், தனது குடும்பத்தாரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.