Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர்

11 ஏப், 2025 - 02:57 IST
எழுத்தின் அளவு:
Priya-Prakash-Varrier-posts-emotional-post-about-Ajith


கடந்த 2019-ல் மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் அந்த படத்தில் தனது வித்தியாசமான கண் சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து புருவ அழகி என்கிற பெயரையும் பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மாறி மாறி சில படங்களில் நடித்தாலும் அவருக்கு ஏற்ற வெளிச்சம் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த வகையில் தமிழில் முதல் அடியை எடுத்து வைத்த பிரியா பிரகாஷ் வாரியருக்கு தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'குட் பேட் அக்லி' இன்னும் திரையுலக வாசலை அகல திறந்து விட்டுள்ளது என்று சொல்லலாம். இந்த படத்தில் கொஞ்சம் எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்து தனது சோசியல் மீடியாவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.

இது குறித்து அவர் கூறும்போது, “எங்கிருந்து துவங்குவது என்று எனக்கு தெரியவில்லை. அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. எவ்வளவு எழுதினாலும் அஜித் சாரை பற்றி சொல்வதற்கு போதாது என்று தான் தெரிகிறது. அவருடனான என்னுடைய முதல் உரையாடலில் இருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை, அவர் வேறு யாரோ ஒருவர் அல்ல., நம்மை சேர்ந்த ஒருவர் என்பதை ஒவ்வொரு நாளும் உணரும் விதமாக செய்தார், குறிப்பாக கப்பலில் படமாக்கப்பட்ட காட்சிகளின் போது ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டு மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதது,

மேலும் உங்களுடைய குடும்பம், கார்கள், பயணம், ரேஸ் என ஒவ்வொன்றை குறித்தும் உங்களது பார்வை தெரிய வந்தபோது உங்கள் கண்களில் அவ்வளவு பிரகாசம் இருந்தது, இந்த அளவிற்கு தன் தொழிலை நேசிக்கும் ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. உங்களைப் போன்றவர்களின் பொறுமையும் படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும்போது என்னை போன்ற இளைஞர்களுக்கு இன்னும் பல வருடங்கள் பயணிப்பதற்கான ஒரு உந்து சக்தி ஆகவே இருக்கும் என்பது சந்தேகம் இல்லை. உண்மையிலேயே நீங்கள் ஜென்டில்மேன்.. எவ்வளவு உயரத்திற்கு போனாலும் நாம் தரையிலேயே கால் பதித்து நிற்க வேண்டும் என்கிற ஒரு நல்ல விஷயத்தை தான் உங்களிடம் இருந்து நான் எடுத்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்!'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி ... வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு வேறு வழியின்றி விஜய் படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in