சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹிட்டான பாடல்களை மீண்டும் தங்களது படங்களில் இடம் பெறச் செய்து, அதை டிரெண்ட் ஆக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தில் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' என்ற 1995ல் வெளிவந்த 'அசுரன்' படத்தின் பாடலைப் பயன்படுத்தி இருந்தார்கள். அது மிகவும் பிரபலமானது.
அதற்கடுத்து விஜய் நடிக்க லோகேஷ் இயக்கிய 'லியோ' படத்தில் 2000ம் ஆண்டில் வெளிவந்த 'ஏழையின் சிரிப்பில்' படத்தில் இடம்பெற்ற 'கரு கரு கருப்பாயி' என்ற பாடலை சண்டைக் காட்சி ஒன்றில் பயன்படுத்தினார்கள்.
கடந்த வருடம் வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில் நாயகன் தினேஷ் கிரிக்கெட் விளையாட இறங்கும் பேதெல்லாம் 1989ல் வெளிவந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக்குடம்' பாடலைப் பயன்படுத்த அது தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி வரையிலும் பரபரப்பாக உள்ளது.
அதே ஸ்டைலை நேற்று வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சண்டைக் காட்சியில் 1982ல் வெளிவந்த 'சகல கலா வல்லவன்' படத்தில் இடம் பெற்ற 'இளமை இதோ இதோ' பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல மேலும் சில பல பழைய பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. மற்றவர்கள் ஒரே ஒரு பாடலை மட்டுமே பயன்படுத்தி இருக்க இதில் நிறைய பாடல்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இது ஒரு டிரெண்ட் ஆகவே இப்போது மாறிவிட்டது. இருந்தாலும் அந்தந்த படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் அவர்களது படங்களில் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம் பெறுவதை அனுமதிப்பதற்கு வெட்கப்பட வேண்டும். அதிலும் 'குட் பேட் அக்லி' படத்தில் நிறைய பாடல்கள். அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், அஜித் படம் என்பதால் எதுவும் பேசாமல் இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடந்திருக்கக் கூடும். இருந்தாலும் அதனால் தனது தனித் தன்மை போய்விடும் என்பதை அவர் எதிர்காலத்திலாவது உணரட்டும்.