பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” | திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி | மோகன்லாலுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன் | 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு |
பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக இதை உருவாக்கும் நோக்கில் பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்திலிருந்து மோகன்லால் என முன்னணி பிரபல நட்சத்திரங்களை இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். வரும் ஏப்ரல் 25ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளார் விஷ்ணு மஞ்சு.
அதன் ஒரு பகுதியாக நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை நேற்று நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விஷ்ணு மஞ்சுவுடன் அவரது தந்தை மோகன் பாபு மற்றும் நடிகர் பிரபுதேவாவும் உடன் இருந்தனர். அப்போது முதல்வருக்கு ஓவியம் ஒன்றை விஷ்ணு மஞ்சு பரிசாக வழங்கினார். முதல்வர் யோகி ஆத்யநாத்தும் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரபுதேவா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவரும் இந்த சந்திப்பின்போது கண்ணப்பா குழுவினருடன் இணைந்து சென்று யோகி ஆத்யநாத்தை சந்தித்துள்ளார்.