நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக இதை உருவாக்கும் நோக்கில் பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்திலிருந்து மோகன்லால் என முன்னணி பிரபல நட்சத்திரங்களை இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். வரும் ஏப்ரல் 25ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளார் விஷ்ணு மஞ்சு.
அதன் ஒரு பகுதியாக நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை நேற்று நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விஷ்ணு மஞ்சுவுடன் அவரது தந்தை மோகன் பாபு மற்றும் நடிகர் பிரபுதேவாவும் உடன் இருந்தனர். அப்போது முதல்வருக்கு ஓவியம் ஒன்றை விஷ்ணு மஞ்சு பரிசாக வழங்கினார். முதல்வர் யோகி ஆத்யநாத்தும் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரபுதேவா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவரும் இந்த சந்திப்பின்போது கண்ணப்பா குழுவினருடன் இணைந்து சென்று யோகி ஆத்யநாத்தை சந்தித்துள்ளார்.