சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்., 10-ந்தேதி வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் முதல் காட்சி எப்போது போடப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
அதிகாலை காட்சிகள் இப்போது போடப்படாத நிலையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் காலை 9 மணி முதல் காட்சிகள் துவங்கப்படும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.
அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் சுமார் 900 அரங்குகள் வரை வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் இன்னொரு சிறப்பு காட்சி போடலாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.