ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஒரு காலத்தில் வெள்ளிவிழா இயக்குனராக இருந்த டி.ராஜேந்தருக்கு தொடக்கம் முதலே நடிகராகும் ஆசை இருந்தது. ஒரு தலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கேரக்டரில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் நடிக்கவில்லை. அதோடு தனது முகத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கமும் இருந்தது. என்றாலும் தனது படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டி வந்தார்.
இந்த நிலையில்தான் 'உயிருள்ளவரை உஷா' படத்தை தயாரித்து, இயக்கினார். இந்த படத்தில் காதலர்களுக்கு உதவும் நல்ல தாதாவாக 'செயின் ஜெயபால்' என்ற கேரக்டரை வலுவாக எழுதியிருந்தார். இந்த கேரக்டரில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றவே ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அதோடு தேவைப்பட்டால் செயின் ஜெயபால் கேரக்டரை இன்னும் பெரிதாக்கி படத்திற்கு 'செயின் ஜெயபால்' என்றே டைட்டில் வைப்பதாக கூறினார். ஆனால் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். டி.ராஜேந்தர் எழுதும் அடுக்குமொழி வசனத்தை தன்னால் பேச முடியாது என்று கருதி தவிர்த்தாகவும் கூறுவார்கள்.
அதன்பிறகு அந்த கேரக்டரில் டி.ராஜேந்தரே நடித்தார். முதன்முதலில் டி ராஜேந்தர் முதன்மை கேரக்டரில் நடித்த படம் இது. படமும் பெரிய வெற்றி பெற்றது. ஜெயின் ஜெயபால் கேரக்டரும் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நடிக்கவும் தொடங்கினார்.