எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
பல திரைப்படங்களின் வெற்றிக்கு ஒரே ஒரு பாடல் காரணமாக அமைந்து விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 'நாளை நமதே' படத்தில் 'நாளை நமதே' என்ற பாடல். இப்படி ஒரு பாடல் 1948ம் ஆண்டே வெளிவந்து படத்தையும் வெற்றி பெற வைத்தது. படம் 'ஆதித்யன் கனவு'. பாடல் 'மதுரமான ருசி உள்ளதே... பால்கோவா...' என்ற பாடல்.
மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் இயக்கி, தயாரித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி தேவி, டி.ஆர்.ரஜனி, கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், ஜெய கவுரி, ஏ.கருணாநிதி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள் ஒரு நாட்டின் தளபதியாக இருப்பார்கள். நண்பர்களில் ஒருவருக்கு ஆண் குழந்தையும், இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து வெவ்வேறு தேசங்களுக்கு சென்று விடுவார்கள். ஒருவருக்கு டி.ஆர்.மகாலிங்கமும், இன்னொருவருக்கு அஞ்சலிதேவியும் குழந்தைகளாக பிறப்பார்கள். அவர்களின் கனவு படி இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதுதான் படத்தின் கதை.
பல படங்களில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர ஒரு குடும்ப பாடல் இருக்கும் அப்படி இந்த படத்தில் குடும்பத்தை சேர்க்கும் பாடலாக அமைந்ததுதான் 'பால்கோவா' பாடல். இந்த பாடலை டி.ஆர்.மகாலிங்கமும், சூலமங்கலம் ஜெயலட்சுமியும் பாடினார்கள். ஜி.ராமநாதன் இசை அ மைத்திருந்தார், பாபநாசம் சிவன் பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படத்தில் இடம்பெற்ற லலிதா - பத்மினியின் நடன நாடகமும் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.
(பால்கோவா பாடலை கேட்க இதனை கிளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=7ifl6sKnPn4)