சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பல திரைப்படங்களின் வெற்றிக்கு ஒரே ஒரு பாடல் காரணமாக அமைந்து விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 'நாளை நமதே' படத்தில் 'நாளை நமதே' என்ற பாடல். இப்படி ஒரு பாடல் 1948ம் ஆண்டே வெளிவந்து படத்தையும் வெற்றி பெற வைத்தது. படம் 'ஆதித்யன் கனவு'. பாடல் 'மதுரமான ருசி உள்ளதே... பால்கோவா...' என்ற பாடல்.
மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் இயக்கி, தயாரித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி தேவி, டி.ஆர்.ரஜனி, கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், ஜெய கவுரி, ஏ.கருணாநிதி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள் ஒரு நாட்டின் தளபதியாக இருப்பார்கள். நண்பர்களில் ஒருவருக்கு ஆண் குழந்தையும், இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து வெவ்வேறு தேசங்களுக்கு சென்று விடுவார்கள். ஒருவருக்கு டி.ஆர்.மகாலிங்கமும், இன்னொருவருக்கு அஞ்சலிதேவியும் குழந்தைகளாக பிறப்பார்கள். அவர்களின் கனவு படி இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதுதான் படத்தின் கதை.
பல படங்களில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர ஒரு குடும்ப பாடல் இருக்கும் அப்படி இந்த படத்தில் குடும்பத்தை சேர்க்கும் பாடலாக அமைந்ததுதான் 'பால்கோவா' பாடல். இந்த பாடலை டி.ஆர்.மகாலிங்கமும், சூலமங்கலம் ஜெயலட்சுமியும் பாடினார்கள். ஜி.ராமநாதன் இசை அ மைத்திருந்தார், பாபநாசம் சிவன் பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படத்தில் இடம்பெற்ற லலிதா - பத்மினியின் நடன நாடகமும் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.
(பால்கோவா பாடலை கேட்க இதனை கிளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=7ifl6sKnPn4)




