அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மலையாள சினிமாவின் ஆளுமைகளான மோகன்லாலும், மம்முட்டியும் நெருக்கமான நண்பர்கள். தற்போது உடல்நலம் குறைவாக இருக்கும் மம்முட்டி குணமடைய வேண்டும் என மோகன்லால் சபரிமலைக்கு சென்று வேண்டுதல் செய்தார். இந்த தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தனது 'எம்புரான்' பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த மோகன்லாலிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது "மம்முட்டிக்காக நான் சபரிமலையில் பூஜை செய்ததில் என்ன தவறு. நண்பனுக்காக வேண்டிக்கொண்ட தகவலை வெளியிடத் தேவையில்லை, அது தனிப்பட்ட விஷயம். ஆனால் இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்தவர்கள் தான் வெளியிட்டனர்" என்று கூறினார்.
இதனை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது. இது குறித்து தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். முகம்மது குட்டி என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது.
அந்த ரசீது தான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம் போர்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்தி கொள்வார் என்று கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.