தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அப்போதிருந்த சென்னை மாகாண அரசு போருக்கு ஆதரவான படங்களையும், மக்களை அச்சத்தில் இருந்து மீட்கும் படங்களையும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து போரில் இந்திய வீரர்களின் தியாகம், ஆங்கில அரசின் நேர்மையான நிலைப்பாடு இவற்றை மையமாக கொண்டு படங்கள் வந்தன. இந்த படங்களுக்கு இடையே போரின் காரணமாக மக்கள் படும் அவஸ்தை மிக கடுமையான விலையேற்றம் இவற்றை கண்டித்தும், சென்னை மாகாண அரசை கிண்டல் செய்தும் வெளியான படம் 'மிஸ்.மாலினி'.
ஆர்.கே.நாராயண் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' நாவலை மையமாக வைத்து, கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை எழுதி இயக்கி அவரே நாயகனாகவும் நடித்த படம், கதாநாயகி மாலினியாக நடித்தவர் புஷ்பவல்லி. ஜாவர் சீதாராமன், எம்.எஸ்.சுந்தரி பாய், எஸ்.வரலட்சுமி உட்பட பலர் நடித்தனர். இதில்தான் ஜெமினி பிலிம்சில் மானேஜராக இருந்த கணேசன் சிறிய வேடம் ஒன்றில், அறிமுகமானார். பின்னர் அவர் ஜெமினி கணேசன் ஆனார்.
புகழ்பெற்ற நாடக நடிகையான மாலினி ஒரு சாதாரண மனிதனை காதலித்து அவனை மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைத்து பின்னர் மீண்டும் நாடகத்திற்கே திரும்பி வருவது மாதிரியான கதை.