10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
ஒருவரே சினிமாவின் பல துறைகளை கையாண்டு ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முதன்முறையாக லாவண்யா என்ற பெண் இயக்குனர் 32 துறைகளை கையாண்டு 'பேய் கொட்டு' என்ற படத்தை உருவாக்கி உள்ளார். திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டங் உள்ளிட்ட துறைகளை கையாண்டிருப்பதுடன் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.
லாவண்யாவுடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து லாவண்யா கூறும்போது "கணவன், குழந்தை என வாழ்கிற ஒரு சாதாரண பெண்தான் நான். ஆனால் எனக்குள் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. நன்றாக பாடுவேன், ஆடுவேன், நடிப்பேன், படம் இயக்குவேன், கேமரா கையாளத் தெரியும். இதை கொண்டு சினிமா வாய்ப்பு தேடினால் அட்ஜெஸ்மெண்ட் பண்றீங்களா, இன்வெஸ்ட்மெண்ட் பண்றீங்களா? என்றுதான் கேட்டார்கள். அப்போதுதான் எனது மனதில் ஒரு வைராக்கியம் உண்டானது. ஒரு பெண்ணால் சினிமாவில் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த படத்தை நான் உருவாக்கினேன். படம் சொல்லும் கருத்தும் அதுதான்" என்றார்.