ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன் | எனது அந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டது ஏன் : மோகன்லால் விளக்கம் | 60 புதுமுக நடிகர்களுடன் பிரித்விராஜ் நடிக்கும் சந்தோஷ் டிராபி | கூலியில் ஏற்பட்ட மனக்குறை : ரெபோ மோனிகா ஜான் ஆதங்கம் | 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிஜினல் கிளைமாக்ஸ் உடன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஷோலே | 'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். விஜயபுரி வீரன், பார்த்தால் பசிதீரும், அன்பே வா, அதே கண்கள், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
1983ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் 'பாயும்புலி' என்ற படத்தை தயாரித்தது. '36 சேம்பர் ஆப் ஷாலின்' என்ற புரூஸ் லீ படத்தின் பாணியில் அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம், அதிரடியான சண்டை காட்சிகளை அமைத்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைத்தது போன்று இந்த படத்திலும் ஒரு பிரபலத்தை அதிரடியாக களம் இறக்க முடிவு செய்தது. அப்போது ஏ.சி.திருலோகச்சந்தர் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிப்பதற்காகவே சினிமாவுக்கு வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதை கவனித்த ஏவிஎம் நிறுவனம் 'பாயும்புலி' படத்தில் வில்லனாக நடிக்க ஏ.சி.திருலோகச்சந்தரை அணுகியது. கதையை கேட்ட திருலோகச்சந்தருக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் நடிக்க மறுத்து விட்டார்.
அதன்பிறகு வில்லன் கேரக்டருக்கு அப்போது வளர்ந்து வந்த கராத்தே மணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சண்டை காட்சிகளை வடிவமைப்பது தொடர்பாக கராத்தே மணிக்கும், ஜூடோ ரத்தினத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து ஜெய்சங்கர் வில்லனாக நடித்தார்.