பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் ‛எந்திரன்'. இந்த படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் பிப்., 17ல் பிஎம்எல்ஏ (PMLA) விதிகளின் படி ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதன் மதிப்பு 10 முதல் 11 என கூறப்படுகிறது. இந்த விஷயம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த ஷங்கர், ‛‛எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்தது. இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது. அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார் ஷங்கர். இந்த வழக்கு இன்று(மார்ச் 11) விசாரணைக்கு வந்தபோது, ‛‛தனி நபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கக்கூடாது'' என கருத்து தெரிவித்த நீதிமன்றம் ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்., 21க்கு தள்ளி வைக்கப்பட்டது.