2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் 2018 படம் மூலம் பிரபலமானார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவரது இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இதனை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிம்புவின் 3 பட அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இதில் இந்த கூட்டணியில் உருவாகும் படம் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க போகிறதாம். இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் இன்னொரு பிரபலமான நடிகரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அநேகமாக ஆர்யா நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். சிம்புவிற்கு சொன்ன கதையில் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கின்றார் என கூறப்படுகிறது.